புத்தாண்டு பலன் – 2019 கடகம்!

0

கடகம். புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தாராளமான தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.

தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்கள் வரும் 07.03.2019 முதல் மாறுதலாகி கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து நட்பு கரம் நீட்டுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெற்று மனதில் பூரிப்பு உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். அசையா சொத்துக்கள் வழியில் இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை நிலவுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கஷ்டங்களும், போட்டிகளும் விலகி எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் ஏற்றமிகு பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அனுகூலமான இடமாற்றமும் எளிதில் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மனநிறைவை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கடந்த கால உடல் நல பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை
உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தாராள தனவரவுகளும் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கைகள் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அவிபிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் நல்ல லாபம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மறைமுக போட்டி பொறாமைகள் விலகி வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார மேன்மையும் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி
குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் கமிஷன்- ஏஜென்ஸி கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு புகழ் பெருமை உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கட்சி பணிகளுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளை பொருளுக்கு ஏற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமைந்து பொருளாதார நிலை உயரும். இசை துறை, நடன துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள்
பெண்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்க கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகி மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். நல்ல நண்பர்களின் நட்புக்கள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஜனவரி
ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆரோக்கியத்தில் மந்த நிலை உண்டானாலும் எடுக்கும் காரியத்தை திறம்பட செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ராகு, கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

பிப்ரவரி
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.

மார்ச்
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, சஞ்சரிப்பதாலும் 10,11-ல் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.

ஏப்ரல்
ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். இம்மாதம் மாதபிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

மே
மாதகோளான சூரியன் சாதகமாக 10,11-ல் சஞ்சரிப்பதாலும், 9,10-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.

ஜுன்
மாதகோளான சூரியன் மாத முற்பாதியில் 11-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

ஜுலை
ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்
ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். குரு பகவானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.

செப்டம்பர்
பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

அக்டோபர்
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சூரியன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 09-10-2019 காலை 09.40 மணி முதல் 11-10-2019 இரவு 10.25 மணி வரை.

நவம்பர்
ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற்றத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 5-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி வரை.

டிசம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை மற்றும் 30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9
நிறம் – வெள்ளை, சிவப்பு
கிழமை – திங்கள்,வியாழன்
கல் – முத்து
திசை – வடகிழக்கு
தெய்வம் – வெங்கடாசலபதி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 மிதுனம் !
Next articleஇந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்!