புத்தாண்டு பலன்கள் 2022 புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் எப்படியான பலன்களை தரப்போகின்றது!

0

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம் ஆண்டு தன காரகன் குரு பகவான் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை ஆண்டின் தொடக்கத்தில் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆண்டு கோளான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியை அளிக்கும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம். உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில்- உத்தியோக ரீதியாக கவனமான செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். திருக்கணிதப்படி சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்

இந்த ஆண்டில் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி உங்கள் மன அமைதி குறையும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். எது எப்படி இருந்தாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் ஒருசில அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக தான் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலாளர்கள் வீண் சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அபிவிருத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். எடுக்கும் பணிகளில் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும் உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது நிதானம் தேவை. அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் சிக்கல்களில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை தற்போதிய காலத்திற்கு தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் அமேக ஆதரவுகளைப் பெற்று விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர், புகழை தக்க வைத்துக் கொள்ள சற்று பாடு பட வேண்டி இருந்தாலும் பதவிக்கு பங்கம் ஏற்படாது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியத்தொகை சற்றே தாமதப்படும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

படிப்பு

கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை தடையின்றி எடுத்து விடுவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.

முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 30-12-2021 இரவு 07.07 மணி முதல் 01-01-2022 இரவு 07.17 மணி வரை மற்றும் 27-01-2022 அதிகாலை 03.12 மணி முதல் 29-01-2022 அதிகாலை 05.07 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பெரிய மனிதர்கள் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-02-2022 காலை 08.56 மணி முதல் 25-02-2022 பகல் 12.07 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன், 11-ல் குரு, மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். இருக்கும் இடத்தில் கௌரவமான நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்களை பெறமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 22-03-2022 பகல் 02.33 மணி முதல் 24-03-2022 மாலை 05.29 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சை குறைப்பது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் மாத முற்பாதியில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-04-2022 இரவு 10.07 மணி முதல் 20-04-2022 இரவு 11.40 மணி வரை.

மே.

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. மகாவிஷ்ணுயை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 16-05-2022 காலை 07.53 மணி முதல் 18-05-2022 காலை 08.09 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் தொழிலாளர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பைரவரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-06-2022 மாலை 06.33 மணி முதல் 14-06-2022 மாலை 06.32 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-07-2022 அதிகாலை 04.20 மணி முதல் 12-07-2022 அதிகாலை 05.15 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 06-08-2022 பகல் 12.06 மணி முதல் 08-08-2022 பகல் 02.37 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை தரும் அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-09-2022 மாலை 05.55 மணி முதல் 04-09-2022 இரவு 09.42 மணி வரை மற்றும் 29-09-2022 இரவு 11.25 மணி முதல் 02-10-2022 அதிகாலை 03.10 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.

சந்திராஷ்டமம் – 27-10-2022 காலை 06.30 மணி முதல் 29-10-2022 காலை 09.05 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசியில் ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் காலம் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும்.

சிவ வழிபாடு செய்வது உத்தமம்-.

சந்திராஷ்டமம் – 23-11-2022 மாலை 04.03 மணி முதல் 25-11-2022 மாலை 05.20 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுக்கிரன் 9,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 21-12-2022 அதிகாலை 02.57 மணி முதல் 23-12-2022 அதிகாலை 04.02 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,
நிறம் – ஆழ்சிவப்பு
கிழமை – செவ்வாய்
கல் – பவளம்
திசை – தெற்கு
தெய்வம் – முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 10.01.2022 Today Rasi Palan 10-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleபுத்தாண்டு பலன்கள் 2022 புத்தாண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் எப்படியான பலன்களை தரப்போகின்றது!