பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

0

பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழ் இளைஞன், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பான வழங்கு இரு நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது DOVER என்ற பகுதிக்கு சென்ற தமிழ் இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த 20 வயதான ஹரீஷ் செல்வசந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி இந்த இளைஞனின் சடலம் லொறி ஒன்றின் சாரதியினால் மீட்கப்பட்டுள்ளது.

அவரது அடையாளத்தை உறுதி செய்ய தற்காலிக ஓட்டுநர் உரிமம் கொண்ட பணப்பை ஒன்று இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரீஷ் தனது சொந்த வர்த்தகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும், மன ரீதியான பிரச்சினைகள் குறித்து பேசினாரா என நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவரது தந்தை, தாய், சகோதரர் சகோதரி மற்றும் மூன்று உறவினர்கள் ஆகியோர், ஹரீஷ் என்ன செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவு செய்த போதிலும், இன்னமும் அவர்கள் பதில் தேடி கொண்டுள்ளனர்.

Queen Elizabeth the Queen Mother வைத்தியசாலையில் நடந்த பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ஆபத்தான எரி காயங்கள் காணப்பட்டதக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது முக வடிவம் மட்டுமே அவரை அடையாளம் காண உதவியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் திகதி Dover என்ற இடத்திற்கு சுற்றலா பயணம் மேற்கொள்வதற்காக அதிவேக ரயிலில் அவர் பயணம் செய்ய ஆயத்தமாகியுள்ளார். அத்துடன் 5 லீற்றர் பெற்ரோலும் அவர் கொள்வனவு செய்துள்ளார்.

அன்னைய தினம் 7.30 மணியளவில் இரவு உணவை எடுத்து கொண்டவர் வீட்டின் மேல் மாடிக்கு சென்று ஆடைகளை அணிந்து கொண்டுள்ளார். அவரது தனது தோற்பட்டை பையில் பெற்ரோலையும் மறைத்து கொண்டுள்ளார்.

“நான் வேலைக்கு செல்கின்றேன்” என அவரது தாயிடம் கூறியுள்ளார். அதுவே அவர் தன்னிடம் பேசிய இறுதி வார்த்தைகள் எனவும் இறுதியாக சந்தித்த தருணம் எனவும் நீதிமன்றத்தில் தாயார் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இறுதியாக ஹரீஷை கண்ட தந்தை “மகன் மகனாக இல்லை” எனவும், ஏதோ சரியாக இல்லை என்பதனையும் உணர்ந்தார். எனினும் மகன் தற்கொலை செய்து கொள்வான் என தான் நினைக்கவில்லை என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தனது கற்கையை நிறைவு செய்வதற்கு முன்னரே பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார். முதல் ஆண்டில் பரீட்சையில் சித்தியடைந்தவர் இரண்டாவது ஆண்டு தவறிவிட்டார் என ஹரீஷின் தந்தை செல்வசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகத்தில் இருந்து விலகியவர் இரண்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். பீட்சா விற்பனை நிலையம் ஒன்றில் உயிரிழப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வேலையில் இணைந்தார். அங்கு தான் ஏதாவது பிரச்சினை இருக்கும் என நான் நினைக்கவில்லை.

Dover பகுதிக்கு நாங்கள் இதற்கு முன்னர் சென்றத்தில்லை. Doverக்கும் ஹரீஷிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என என்னால் நினைக்க முடியவில்லை.

Southampton பல்கலைக்கழகத்தில் கற்றவர் கணிதம் மற்றும் வர்த்தக பிரிவில் சிறப்பாக கற்ற ஒரு மாணவராகும். எனினும் இரண்டாவது தவணையில் அதனை அவர் தவறவிட்டார் என தந்தை குறிப்பிட்டார்.

அவர் தனது முதல் ஆண்டில் பல்கலைகழகத்தில் சிறப்பாக கற்று மகிழ்ச்சியாக தான் இருந்தார் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

அவர் சமூகத்துடன் நாட்களை கழித்தார். வித்தியாசமாக ஆடைகளை அணிய ஆரம்பித்தார். எனினும் அதிக களியாட்டங்களில் கலந்து கொண்டமையினால் பரீட்சையில் சித்தியடையவில்லை.

2016ஆம் ஆண்டு இறுதியில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் பல்கலைகழகத்தை விட்டு வெளியேறினார் என நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்த ஹரீஷ் உயிரிழப்பதற்கு முன்னர் தெற்காசிய நாடு ஒன்றிற்கு ஒரு மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தனது முதல் வருட பல்கலைகழக காலத்தில் தான் ஒரு நாத்திகர் என அவர் குறிப்பிட்டார் என அவரது நண்பர் கூறியுள்ளார்.

ஒரு மாத பயணத்தின் பின்னர் அவர் நன்கு மாற்றமடைந்தார். தனது வாழும் வீட்டை விட்டு வெளியேற விரும்பினார். அவரது குறுந்தகவல் பதில்கள் எல்லாம் வித்தியாசமாக காணப்பட்டது. இவ்வாறான நிலையில் “விடயங்கள் நன்றாக போய்க்கொண்டுள்ளது” என குறுந்தகவல் அனுப்பினார்.

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார். அது அதிர்ச்சியாக இருந்தது என நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவே எண்ணப்படுகின்றது. அவரது மரணத்தில் மூன்றாவது தரப்பினர் தொடர்புப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை இன்னமும் பெற்றோர் உட்பட யாரும் அறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமரணமடைந்த 18 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டு உயிர் பிழைத்த முதியவர்: வியக்க வைக்கும் சம்பவம்!
Next article37 வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை எப்படியிருந்தது? வியப்பூட்டும் காணொளி!