பிரித்தானியாவில் திருமணமே செய்து கொள்ளாத ஆண் ஒருவர் மன வளர்ச்சி குன்றிய 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Huddersfield நகரை சேர்ந்தவர் பென் கார்ப்பெண்டர் (35).
இவருக்கு மனவளர்ச்சியால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.
இதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் பென் கடந்த 9 ஆண்டுகளாக 4 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார் பென்.
பென்னின் தியாக உள்ளத்தைக் கண்ட பல பெண்கள் தாங்கள் அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்கள்.
ஆனால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எதிர்கால வாழ்வு கருதி, பிரம்மச்சரிய வாழ்க்கையை எப்போதும் தொடர போவதாக பென் கூறியுள்ளார்.
இதையடுத்து பென் ஒரு மாமனிதர் என பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.







