சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது நடிகர் தளபதி விஜய்யின் பேச்சு தான். இதுவரை இல்லாமல் தற்போது அவர் அரசியல் பற்றி பேசியுள்ளது அவர் விரைவில் அரசியலில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி விஜய் பேசியது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “அசத்தல், செம்ம பன்ச். யாரோ எழுதி கொடுத்ததை விஜய் பேசியது போல எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் காந்தி, அரசியல் பற்றி அவர் பேசியதும் நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்” என கூறியுள்ளார் கஸ்தூரி.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: