தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்களால் திக்குமுக்காடி போனது.
அதிலும் விஜய் பேசும் போது அவர்களின் கோஷம் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது. அதனால் என்னவோ தளபதியின் பேச்சில் அரசியல் வசனங்கள் சும்மா அனல் பறந்தது.
இந்நிலையில் இந்த பேச்சுக்கு இதுவரை எந்த அரசியல் பிரமுகர்களும் கருத்து தெரிவிக்காத நிலையில் தற்போது முதல் ஆளாக தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் திருநாவுகரசர் விஜய், அஜித் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம் என பச்சை கொடியினை காட்டியுள்ளார்.
மேலும் அவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாழ்த்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: