பிக்பாஸிற்கு ஐஸ் வைக்கும் ரித்விகா ஏன் தெரியுமா?

0

ஐஸ்வர்யா பாணியில் தற்போது ரித்விகாவும் அடிக்கடி பிக்பாஸ் புராணம் பாட ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா முதலிடத்திலும், ஐஸ்வர்யா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இறுதிச் சுற்றில் உள்ள நான்கு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக ரித்விகாவிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் செல்லக்குட்டி
அதாவது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஒருநாள், ஐஸ்வர்யா விளையாட்டாக பிக்பாஸுக்கு ”ஐ லவ் யூ” சொன்னார். அதோடு தன்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா எனவும் அவர் கேட்டார். அன்று முதல் இன்று வரை பிக்பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா தான் என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டு மருமகள்
ஐஸ்வர்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது கூட அவரை, பிக்பாஸின் மாமியார் என்றே நெட்டிசன்கள் கலாய்த்தனர். கடந்த சீசன் போட்டியாளர் ஆர்த்தி, பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்ற போதுகூட பிக் பாஸ் வீட்டு மருமகளே என ஐஸ்வர்யாவை அழைத்தார்.

டைட்டில் வின்னர் இவர்தான்
இப்படி பிக்பாஸின் செல்லக்குட்டியாக இருப்பதால் தான், எவ்வளவோ சர்ச்சைகளில் சிக்கியும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு வருகிறார் என்ற பேச்சும் உள்ளது. டைட்டிலையும் அவர் தான் வெல்வார் என்பதையும் கடந்த சீசன் போட்டியாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர் வரை ஒரே குரலாக சொல்லி வருகின்றனர்.

ஐஸ்வர்யாவை பின்பற்றும் ரித்து
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ரித்விகாவின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரும் பிக்பாஸ், பிக்பாஸ் என அடிக்கடி கூறி வருகிறார். ஐஸ்வர்யாவைப் போலவே தானும் பிக்பாஸின் செல்லக்குட்டியாக மாறி பட்டத்தை தட்டிச் சென்று விட வேண்டும் என்பது தான் ரித்விகாவின் புதிய ஸ்ட்ராடஜியா எனத் தெரியவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பு பல்கலைக்கழகம்! உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில்!
Next articleடிரைவர் பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றிய பின்பு செய்த‌ கேவலமான செயல்!