Home thatstamil one india tamil oneindia tamil பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை!

பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை!

0
543

அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகையின் அரண்மனை இன்று கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது.

பரமக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சிவபாக்கியம் என்பவர் பலகோடி மதிப்பிலான தனது அரண்மனை வீட்டை , அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்தார்.

அதன்படி இந்த வீடு சிலகாலம் பெண்களின் பிரசவ மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது, பின்பு காட்டுப்பரமக்குடியில் உள்ள தலைமை மருத்துவமனையோடு பிரசவ ஆஸ்பத்திரி இணைக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் இவர் தானமாக வழங்கிய அரண்மனை வீடு இன்று பாழடைந்து இருக்கிறது. கட்டிடத்தின் பின் பகுதியில் ஓடும் கழிவுநீர் கட்டிடத்திற்குள் புகுந்து குளங்கள் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் புழுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரப்பும் இடமாக திகழ்கிறது.

விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக அந்த அரண்மனை இருக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்கட்டிடத்தை பராமரிக்க பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Previous articleரணிலின் வெற்றி உறுதியானது? பிரதமர் பக்கம் சாய்ந்த முக்கிய தலைமைகள்!
Next articleரூ. 4442 கோடியுடன் முதல் நாள் ஏலம்! மிரள வைக்கும் பிசிசிஐ!