பழைய செய்திதாள்களை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்த உண்மை!

0

கேரளாவில் பழைய செய்திதாள்களில் நகையை வைத்திருந்த பெண், தெரியாமல் நகைகள் இருந்த செய்திதாள்களை எடைக்கு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் Karakkamandapam-ல் இருக்கும் Pottavila பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டில் இருந்த பழைய செய்திதாள்களை விற்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவருடைய வீட்டிற்கு வந்த பழைய செய்திதாள்களை வாங்கும் நபரிடம் எடைக்கு போட்டுள்ளார்.

அதன் பின் சிறிது நேரத்தில் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பழைய செய்திதாள்களை வாங்கிய நபரை பிடிப்பதற்காக தன் மகளுடன் வண்டியில் அவரை தேடியுள்ளார்.

அதன் பின் அவர் கடை வைத்திருக்கும் Attakulangara பகுதிக்கு சென்று தான் விற்ற பழைய செய்திதாள்களின் உள்ளே நகைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபரோ அது எல்லாம் எதுவும் இல்லை என்று மறுக்கவே, உடனே அந்த பெண் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போதும், இல்லை என்று கூறியுள்ளான். இதையடுத்து அந்த நபரை கடையில் சோதனை செய்த போது, 17 சவரன் நகைகள் இருந்துள்ளது.

இதனால் அவரை கைது செய்த பொலிசார் மீதம் உள்ள 20 சவரன் நகைகள் எங்கே என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது கேரளாவின் Karimadom பகுதியில் வசித்து வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம்பி ஏமாந்துவிட்டேன்! அலங்கோலமாக கிடந்த 16 வயது சிறுமியின் வாக்குமூலம்!
Next articleஇன்று முதல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !