பலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்! அதிர வைக்கும் ஸ்ரீரெட்டி!

0

சமீபகாலமாக இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வரும் விடயம் நடிகை ஸ்ரீரெட்டி லீக்ஸ் தான்.

இந்நிலையில், தற்போது பிரபலங்களுடன் தனது படுக்கையை பகிர்ந்ததற்கான காரணம் குறித்து தற்போது ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.

அதில், இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே நடிகை த்ரிஷா தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.

தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டியிடம் பேட்டி எடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் முதல் சின்னஞ்சிறிய யூட்யூப் சேனல் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? அவர்களின் ஆசைக்கு உடன்படாமல் சென்று இருக்கலாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, தனக்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஏன் வெறியே இருந்தது. படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் பிரபல நடிகை ஆக முடியும் என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. இதனால் தான் நான் என் மானத்தை விட நடிகையாக வேண்டும் என்பதே முக்கியம் என்று என்னையே பலருக்கும் விருந்தாக்கினேன் என்று ஸ்ரீரெட்டி கூறினார்.

மேலும் ஒவ்வொருவரும் வாய்ப்பு தருவார்கள் தருவார்கள் என்று நம்பியே என்னை நான் இழந்த கொண்டிருந்தேன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி!
Next article4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!