பற்கள் வெண்மைக்கு இந்த ஒரு பொருள் போதும்! உடனடி பலனை பெறலாம்!

0

பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க கரித்தூள் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த கரித்தூள், கெமிக்கல்களில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவுகிறது.

அதுவும் போதை பொருட்கள், பாம்பு கடி போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை போக்கவும், தண்ணீரை பில்டர் செய்து, சுத்தமான தண்ணீரை பெறவும் கரித்தூள் உதவுகிறது

இந்த கரித்தூளானது மருந்து கடைகளில் கேப்சூல், மாத்திரை, அல்லது பௌடராகவும் கிடைக்கிறது.

இதில் ஆக்டிவேடேட் கரித்தூள் கேப்சூலை (Activated Charcoal Capsules) பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை?
முதலில் பற்களை வெறும் தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.

பின் கேப்சூலில் உள்ள கரித்தூளை நேரடியாக பற்களில் தடவலாம் அல்லது டூத் பிரஷில் தடவியும் பற்களை துலக்கலாம்.

டூத் பிரஷில் பற்களை துலக்கும் போது வட்ட வடிவத்தில் மெதுவாக மசாஜ் செய்து 3-4 நிமிடங்கள் வரை பற்களை துலக்க வேண்டும்.

அதன் பின் நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும், இம்முறையை பின்பற்றுவதால் பளபளக்கும் பற்களை உடனடியாக பெறலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா! சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க!
Next articleஉங்க சிறுநீரகம் வலுப் பெறவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் உதவும் ஒரு அரிய மூலிகை!