பரிதாபமாக பலியான சோக சம்பவம்! நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவர்!

0

புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 26 வயதான Krupali Nikam.

இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து Saudagar பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

Nashik Phata பகுதியை அடையும் போது பட்டம் விட பயன்படுத்தப்படும், மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அறுத்துள்ளது. இதில் நிலைகுலைந்த Krupali நடுவீதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பட்டம் விட்டவர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபரபரப்பு தகவல்! அபிராமி சிறைக்குள் என்ன செய்தார் தெரியுமா?
Next articleதொடரும் மர்மம்! விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!!