நீங்க இந்த நேரத்தில் பிறந்தீங்களா!..ஓஹோன்னு இருப்பீங்களாம்!

0

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி கூறிவிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிகாலை 6-8

அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அதிக நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையும்.

காலை 8-10

காலையில் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பு மற்றும் உறவினர்களை கொண்டிருப்பார்கள். இவர்களின் பொருளாதாரம் சீரான நிலையில் இருப்பதால், இவர்களுடைய வாழ்வில் பணம் முக்கிய பங்கினை வகிக்கும்.

நண்பகல் 10-12

நண்பகலில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுமே வெற்றியாகும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதால், பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.

மதியம் 12-2

மதியம் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்கள் புத்திகூர்மை மற்றும் நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.

மதியம் 2-4

மதியம் 2 மணிக்கு மேல் பிறப்பவர்கள் பணம் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

மாலை 4-6

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கை இவர்களுக்கு வலிமையாக இருக்கும்.

மாலை 6-8

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக இருப்பார்கள். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.

இரவு 8-10

இரவில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் கற்பனை திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறப்பாக இருப்பார்கள்.

இரவு 10-12

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பார்கள். தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து செல்வார்கள்.

நள்ளிரவு 12-2

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார்கள்.

நள்ளிரவு 2-4

இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தினை வகிப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்!
Next article‘S’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க!