நிந்தவூரில் இரட்டைகுழந்தைகள் படுகொலை – தாயே செய்த படுபாதகம் ! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0

இன்று காலை 10 மாதங்களான இரு பெண் குழந்தைகள் அம்பாறை மாவட்டம் ,சம்மாந்துறை நிந்தவூர், 14ம் பிரிவு, 153 மௌலானா வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழந்தைகள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டின் கழிப்பறையில் இரு குழந்தைகளும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 36 வயதான குழந்தைகளின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளை குழந்தைகளை தானே கழுத்து அறுத்து கொலை செய்ததாகவும் அறுத்த கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு, பின்னர் தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என அந்த தாய் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேள்ஐ சந்தேக நபராக கருதப்படும் குழந்தைகளின் 26 வயதான தாய் மனநோயாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் தாய் நிந்தவூர் ஆதார வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் அம்பாறை தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தம்பதிகளிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்று கிடைக்கப்பெற்ற நிலையில், அந்த குழந்தை கடந்த வருடம் சலவை இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் குழந்தையின் தாய் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், முறையான சிகிச்சைகள் இன்மையால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும் என பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 6 ராசிக்காரர்களும் எப்போதும் தைரியமும், துணிச்சலும் நிறைந்தவர்களாக இருப்பார்களாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?
Next articleசெம்ம கவர்ச்சி போஸ் கொடுத்து ஒரே நாளில் 10 லட்சம் லைக்ஸுகளை வாங்கிய இலியானா, சென்சேஷன் போட்டோ !