சத்துமாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தலாம்.
தேவையான பொருட்கள்:
கம்பு – 100 கிராம்
ராகி – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
பச்சஅரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
பாசிப்பயறு – 100 கிராம்
கொள்ளு – 100 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம் – 100 கிராம்
ஏலக்காய் – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
மக்காச் சோளம் – 100 கிராம்
கொண்டக்கடலை – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
செய்முறை:
மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் அனைத்தையும் ஆறவைத்து ஒன்று சேர்த்து மிக்சியில் அல்லது மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும். பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.
சத்துபானம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 2 டம்ளர்
சர்க்கரை – தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும். கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும்.