நல்­லூர் கந்­தன் பெருந்­தி­ரு­விழா விரைவில் ஆரம்பம்! அடுத்த மாதம் கொடியேற இருக்கும் நல்லூரான்!

0

நல்­லூர் கந்­தன் பெருந்­தி­ரு­விழா விரைவில் ஆரம்பம்! அடுத்த மாதம் கொடியேற இருக்கும் நல்லூரான்!

வர­லாற்­றுப் பிர­சித்­தி­பெற்ற நல்­லூர் கந்­தசு­வாமி கோவில் வரு­டாந்த பெருந்திரு­விழா அடுத்த மாதம் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொடி­யேற்­றத்­துக்கு முதல்­நா­ளான15 ஆம் திகதி புதன் கி­ழமை முற்­ப­கல் 10 மணிக்­குக் கொடிச்­சீலை எடுத்­து­வ­ரப்­ப­டும். மாலை 5 மணிக்கு வைர­வர் சாந்தி இடம்­பெற்று, மறு­நாள் முற்­ப­கல் 10 மணிக்குக் கொடி­யேற்­றம் நடை­பெ­றும்.

தொடர்ச்­சி­யாக 27 தினங்­கள் திரு­வி­ழாக்­கள் இடம்­பெ­றும். எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் 8ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 7 மணிக்­குத் தேர்த்­தி­ரு­வி­ழா­வும், மறு­நாள் காலை 7 மணிக்குத் தீர்த்­தத் திரு­விழா இடம்­பெற்று செப்­ரெம்­பர் 11 ஆம் திகதி வைர­வர் உற்­ச­வத்­து­டன் திரு­விழா நிறை­வு­ பெ­றும்.

ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­கள் இந்துக் கலா­சார முறைப்­ப­டி­யான ஆடை­க­ளு­டன் கோவி­லுக்­குள் சென்­று­வ­ழி­ப­ட­லாம் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாலிக்­கொடி அறுத்­தோரை மடக்­கிப் பிடித்த மக்கள்!பொலிஸார் அவர்­களை ஏற்­க­ம­றுப்பு!!
Next articleஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்ட சீசா உயிரிழந்தது!