பொலநறுவையில் புதுமண தம்பதியர் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் புதுமண தம்பதியர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் பயணித்த மாப்பிள்ளை தோழன் மற்றும் சாரதி ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: