திருமண பந்தத்தில் இணைந்தார் மைத்திரியின் புதல்வர்!

0

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் திருமண வைபவம் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

எல்கார்டோ நிறுவனத்தின் உரிமையாளரான ரொஹான் வீரரத்னவின் புதல்வியான நிபுனி என்ற பெண்ணை தஹாம் சிறிசேன திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணம் கொழும்பு ஷெங்கீரிலா ஹோட்டலில் நடத்தப்படவிருந்தது. அந்த ஹோட்டல் ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாத குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், திருமண வைபவம் ஹில்டன் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

திருமணத்தை முன்னிட்டு ஹோட்டலுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தண்ணீர் தாரை தாக்குதல் நடத்தும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு திட்டம் காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!
Next articleகுதிவாதம் என்றால் என்ன? குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?