திருமணமான 23 நாட்களிலேயே லெஸ்பியன் பார்ட்னருடன் ஓடிச்சென்ற இளம்பெண்! வெளியான திடுக்கிடும் தகவல்!

0

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 23 நாட்களில் தன் கணவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். தற்போது அவர் இருக்குமிடத்தை கண்டறிந்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிய காவல்துறையினர் ஹரியானா மாநிலம் மானெசரில் அந்தப் பெண் வசிப்பதை கடந்த நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.

அந்த இளம்பெண் தனது கணவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியேறி ஹரியானாவில் வசிக்கும் தனது லெஸ்பியன் பார்ட்னருடன் வாழத் தொடங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்குமான உறவு இப்போ தொடங்கியதில்லையாம், கடந்த 4 வருடங்களாக இவர்கள் உறவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரது புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதும் அவர்கள் இருவரும் தங்களது நிலை குறித்து வாதிட்டனர். தாங்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் தங்களுக்கான துணை மற்றும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

அத்துடன் தனக்கு நடந்த திருமணமே குடும்பத்தாரின் வற்புறுத்தலின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக நிகழ்ந்தது என்பதால் தன்னால் அந்த உறவில் நீடிக்க முடியாது என்றார் ராஜஸ்தானிய இளம்பெண்.

இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம் எனக் கூறி சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து விஷயத்தைச் சுமுகமாக முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்! நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
Next articleஇவருடன் குடும்பம் நடத்தமாட்டேன்! அடம் பிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!