திருகோணமலை மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் !

0

திருகோணமலை-தம்பலகாமம் பிரதான நீர்க்குழாயில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் நீர் துண்டிக்கப்படவுள்ளதாக திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 11,12ம் திகதிகளில் 48 மணி நேரம் நீர் துண்டிக்கப்படவுள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் நீரை சேமித்து வைத்து பயன்படுத்துமாறும் திருகோணமலை பிராந்திய நீர்வடிகாலமைப்புசபை முகாமையாளர் அலுவலகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை – திருமலை நகரம், கிண்ணியா, குச்சவெளி மற்றும் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் நீர் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தம்! பாடசாலை மூடல் !
Next articleஎங்களை இலகுவாக அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைக்கக்கூடாது! சீறிப்பாயும் ஹிஸ்புல்லாஹ் !