தாயும் இரு மகள்களும் கோர விபத்தில் பரிதாபமாக பலி!

0

பொத்துவில் – அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் மோதுண்டு தாய், மகள்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 34 வயதான தாய், 6 வயது மற்றும் 12 வயதான மகள்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 வயதான மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமெனோபாஸ் அசௌகர்யங்களும் விளைவுகளும் !
Next articleதடைப்பட்ட மாதவிலக்கு சீராக உதவும் மலைவேம்பு! மாதவிடாய் தீர்வுகள்!