நடிகர் ஜெய் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அவர் சென்னை 28 படத்தில் ஒரு ரோலில் நடித்தார்.
அதன்பிறகு அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது சோலோ ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இது பற்றி பேசியுள்ள ஜெய், தளபதி விஜய் அளித்த ஒரு அறிவுரை தான் தன்னை ஹீரோவாக்கியது என தெரிவித்துள்ளார்.
பகவதி படத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு தேடி சுற்றினாராம் ஜெய். அப்போது அவரை அழைத்து விஜய், “இப்படி துணை கதாபாத்திரங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க” என கூறியுள்ளார்.
அதனால் தான் அதிக முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்தாராம் ஜெய்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: