தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா!

0

இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தக்காரருக்கும் பொருந்தும். ஆயினும் சிலர் தங்களுடைய வாழ்வின் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து விடுகின்றனர்.

இதற்கு சாமனியனும், பிரபலங்களூம் விதிவிலக்கல்ல. நடிகர் ப்ரத்யுஸ்ஸா பானர்ஜியின் தற்கொலை நம்முன்னே முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றது.

தற்கொலை செய்து கொண்ட பின் அந்த உடலை விட்டு, ஆன்மா வெளியேறி விடுகின்றது. அந்த ஆன்மாவிற்கு என்ன நேரிடுகின்றது?. தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவிற்கும், இயற்கையான முறையில் மரணமடைத்த ஆன்மாவிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?.

இறைவனின் இறுதித் தீர்ப்பு இரண்டு ஆன்மாவிற்கும் சமமானதா?. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது ஒரு சுழற்சி

தற்கொலை இயற்கையான மரணம் இல்லை. இந்த மரணம் இயற்கைக்கு மாறானதாகும். இது ஆன்மீகம் கூறிய வழிமுறைகளுக்கு எதிராகும். இவ்வுலகில் உள்ள பல்வேறு மதங்களில் மிகப்பெரிய பாவமாக தற்கொலை கூறப்படுகின்றது.

இது வேறு நடைமுறை

சாதாரண மற்றும் இயற்கையாக இறந்தவர்களுக்கு பொருந்தும் வழிவகைகள் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பொருந்தாது.

என்ன நடக்கும்?

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மா காம லோகத்தில் (மனம் அல்லது வெளி ஊடுருவிப்பாயும், பூமியைச் சுற்றியுள்ள ஒரு வெளி) சிக்கிக் கொள்ளும். அங்கிருந்து அவைகளால் பூமியில் நடப்பதை முழு உணர்வோடு பார்க்க முடியும்.

எல்லாவற்றையும் பார்க்க முடியும்

அவர்கள் தாங்கள் இருந்து வந்த சூழ்நிலை மற்றும் பழகிய மனிதர்களின் செயல்களை தொடர்ந்து காண வேண்டும். காம லோகத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட உண்மையான ஆயுள் வரை தங்கியிருந்து எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியில் செல்லும் போது காகம் இத் திசை நோக்கி சென்றால் செல்லும் காரியம் வெற்றி தான்!
Next articleகொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கட்டாய கவனத்திற்கு! படித்து விட்டு நண்பர்களுக்கு பண்ணுங்க