புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டு குடும்பத்தார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதில் அரியலூர் கார்குடி கிராமத்தில் உள்ள சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் தமிழசை ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சிவசந்திரனின் மகன் இராணுவ உடை அணிந்து தனது தந்தைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.





