நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சூப்பர் சிங்கர் பூவையார்.
அவரின் சோகமான வாழ்க்கை பொருட்படுத்தாமல் எப்படியும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி சூப்பர் சிங்கரில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
அவரின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கின்றது. அண்மையில் விஜய் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.
தற்போது ஹிப் ஹாப் அரசன் ஆதியுடன் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அவரே மேடையில் கூறியுள்ளார்.
இதேவேளை, சூப்பர் சிங்கர் பூவையார் 8 வயதில் தந்தையை இழந்து தன் குடும்ப சுமையை சுமந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.