தண்ணீர் டிரம்மில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலம்! எதற்காக தெரியுமா!

0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 2வது மனைவியை அடித்துக் கொலை செய்து, உடலை தண்ணீர் டிரம்மில் வைத்து மணல் போட்டு மூடிய கணவரை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூரில் ராமசாமி என்பவர் வீட்டில், குடியிருந்த செந்தில் என்பவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவர் குடியிருந்த வீடு காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், வீட்டை புதிதாக வாடகைக்கு எடுத்த சிலர் சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது, தண்ணீர் டிரம்மில் மண்ணிற்குள் சிதைந்த நிலையில் இருந்த சடலத்தைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் முன்பு குடியிருந்த செந்தில் என்பவர், குடும்ப பிரச்சனையால் 2வது மனைவி லதாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து டிரம்மில் உள்ள மண்ணில் புதைத்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையே, பல்லடத்தில் இருந்த கொலையாளி செந்திலை பொலிசார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇயற்கை வழியில் சொத்தைப் பல்லை நீக்க சூப்பரான வழி இதோ!
Next articleஇளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை! நடுரோட்டில் நடந்த பயங்கரம்!