தங்கத்தை உப்புக்குள் புதைத்து வைத்தால் கிடைக்கும் அதிஸ்டம் என்ன தெரியுமா!

0

நடைமுறையில் பல சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நல்ல பலன்களை தரக்கூடியவை என்று நம்பப்படுகின்றன. இவற்றை செய்த உடனே பலனை எதிர்பார்ப்பது தவறு. செய்த செயலுக்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைக்கும். இந்த பகுதியில் நமது வழக்கத்தில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும், அதன் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தாடைகளில் மஞ்சள் தடவுதல் :

புத்தாடை அணியும் போது அதன் ஓரங்களில் மஞ்சள் தடவி அணிய வேண்டும். ஏனென்றால் நீங்கள் கடையில் துணியை வாங்கும் முன்னர் வேறு யாராவது அதனை வாங்குவதற்காக போட்டு பார்த்து இருப்பார்கள். அல்லது இந்த ஆடையை நம்மால் வாங்க முடியவில்லையே என்று கூட நினைத்து வருத்தப்பட்டிருப்பார்கள். மஞ்சள் தடவி அணிவதால், தோஷம் நீங்கும்.அதுமட்டுமின்றி, புத்தாடையில் மஞ்சள் தடவி அணிந்தால், துணிகள் பெருகும். உங்களுக்கு ஆடை பஞ்சம் வராது.

கொடி மரத்தின் தெய்வ சக்தி

கோவில்களில் காணப்படும் கொடி மரத்திற்கு அதீத தெய்வ சக்தி உள்ளது. நாம் சில நிமிடங்களாவது அந்த கொடி மரத்தின் அருகில் நின்று பிராத்தனை செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கோபுர தரிசனமும், கொடிமர தரிசனமும் மிகவும் அவசியம்.

கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும்.வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்து வைத்திருக்கிறது இந்த கொடி மரம். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெறலாம்!

தென்திசையை பார்த்து உட்காரலாமா?

தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும. சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது.

எமனின் பார்வை அந்த திசையில் விழுவதால், தெற்கு நோக்கி அமர்ந்தால் உடலில் வசீகரம் இல்லாமல் போகும். ஆனால் தூங்கும் போது கிழக்கு, அல்லது தெற்கு திசையில் தலைவைத்து உறங்கலாம்.

தங்கம் சேர..!

அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட தங்க நகை அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரமும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.

நெல்லிக்காயை தேய்த்து குளித்தல்!

ராஜயோகம் வேண்டும் என்றால் நெல்லிக்கனியை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின் உள்ளங்கையில் உருவானது. அதனால் நெல்லிவாசம் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்வாள். பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிகாயை தேய்து குளித்தால் இராஜயோகம் உங்களை தேடி வரும்.

தங்கத்தை உப்பில் வைத்தல்!

புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் இட்டு கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதயவு செய்து இந்த நாட்களில் மட்டும் மற்றவர்களிடம் பணம் கொடுக்காதீங்க!
Next articleகறை படிந்த பற்கள் இருந்தால் இத மட்டும் செய்யுங்க போதும்!