சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இரண்டு பெண்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் ஆனார்கள். ஒருவர் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் மற்றொருவர் கண்ணழகி பிரியா வாரியர்.
இவர்களை வைரலாக்கிய ரசிகர்கள் இப்போது இவர்களை பற்றி அவ்வளவாக பேசுவதில்லை என்பது தான் உண்மை. இந்த நேரத்தில் ஷெரில் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது அவருக்கும் பிரபுள் டோமி என்பவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம். இவர்களது இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளார்களாம். அதோடு திருமணம் கேரளாவில் தொடுபுழா என்ற இடத்தில் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: