சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்!

0

கன்னடத்தில் துனியா விஜய் நடிப்பில் மஸ்தி குடி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. கடந்த நவம்பர் மாதம் படத்தின் சில சண்டை காட்சிகளை ஏரியில் படமாக்கும் போது அனில் ராகவ் மற்றும் உதய் என இரண்டு நடிகர்களும் ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரில் விழுந்துள்ளனர். அவர்கள் உடல்கள் கூட சிரமப்பட்டு தான் போலீசார் மீட்டனர்.

இவர்களின் மரணம் சம்பவமாக இப்பட தயாரிப்பாளர் சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் முன்பு பலமுறை ஆஜராக கூறியும் அவர் செய்யவில்லை.

இதனால் அவரை போலீசார் கைது செய்ய சுந்தர் வீட்டிற்கு செல்ல அந்த நேரத்தில் நடிகர் துனியா விஜய் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் சுந்தர் வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறியிருக்கிறார்.

இதனால் குற்றவாளியை ரகசியமாக தப்பிக்க வைத்த துனியா விஜய்யை பெங்களூர் போலீசார் இன்று சென்னையில் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகம் முழுக்க காலா செய்த வசூல் சாதனை! செம வெயிட்டு நம்ம காலா சேட்டு – லிஸ்ட் இதோ!
Next articleவாய் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு நிறுத்தம்!