பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதில் இப்போது ஜுனியர்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது.
இறுதி போட்டியாளர்கள் 6 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேரும் இணைந்து ஒரு பேட்டி அளித்துள்ளனர்.
இதன் போது, ரித்திக் என்ற போட்டியாளருக்கு வைப்பர் வாயன் என்ற பெயரை பிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் வைத்த போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
எனக்கு அந்த பெயர் வைக்கும் போது மிகவும் கவலையாக இருந்தது. சூட்டிங் முடிந்த பின்னர் ஏன் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று கேட்ட போது அவர் எனக்கு பதில் வழங்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
அது மாத்திரம் இன்றி, சூட்டிங் நடக்கும் போது என்ன நடக்கும் என்ற சுவாரஷ்யமான சம்பவங்களை எல்லோரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, நேர்காணல் எடுக்க வந்தவர்களை செம்மயாக குறும்பு செய்து பூவையார் கலாய்த்துள்ளார். அவரின் குறும்பை பார்த்து அனைவரும் குழம்பி விட்டனர். இறுதியில் பூவையரும் குழம்பி விட்டார்.
மேலும், ஈழத்து சிறுமி சின்மயி இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் சிறந்த நண்பர்கள் என்று கூறியுள்ளார்.
சிங்கபூர் சூர்யா கருத்து வெளியிடும் போது, நானும் பூவையாரும் அடிக்கடி சண்டை போடுவோம். அது பொழுதுபோக்கிற்காக, நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.