பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வைரலானவர் பூவையார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் பூவையார். அவரின் குடும்ப பின்னணி பற்றி பல தகவல் வெளியாகியுள்ளது.
பூவையரின் தந்தை இறந்துவிட்டதாகவும், பூவையார்தான் 8 வயதில் இருந்து பாட்டு பாடி தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அவரது உறவினர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
அவர்களின் அழுகையை பார்த்த பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கதறி அழுகின்றனர். இறுதியாக பாடகர் சங்கர் மஹாதேவன் பூவையார் இந்தியாவின் தலைசிறந்த கலைஞனாக வருவார் என்று வாழ்த்தியுள்ளார்.
இதற்கு பின்னர் நடிகர் விஜய் படத்தில் பாடுவதாற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துள்ளது. அது மாத்திரம் இல்லை, பல்வேறு வாய்ப்புகள் அவரை தேடி வந்து கொண்டிருக்கின்றது.
விளையாட வேண்டிய வயதில் குடும்ப கஷ்டத்தினை தன் கடமையாக நினைத்து போக்கி வரும் பூவையாருக்கும் ரசிகர்களின் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.
நாளைய நிகழ்ச்சியில் யார் இறுதி சுற்றுக்கு செல்லும் இறுதி போட்டியாளர் என்பது தெரிந்து விடும். பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.