இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும். எச்சரிக்கை!

0

இன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள்.

ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சமைத்தப் பின், மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் நீங்கி, அந்த உணவு நஞ்சாக மாறிவிடும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவை ஒருவர் ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். சொல்லப்போனால் எவ்வளவு முறை ஒரு உணவை சூடேற்றுகிறோமோ, அந்த அளவு உணவுகள் நஞ்சாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில், ஒரு உணவை மறுபடியும் சூடேற்றும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருக்கமடைய ஆரம்பிக்கும். சில சமயங்களில், பலமுறை சூடேற்றி சாப்பிடும் உணவுகளால் புற்றுநோய் அபாயமும் உள்ளது.

ஆகவே எப்போதும் நற்பதமாக சமைத்து அப்போதே சாப்பிடுங்கள். எப்போதும் எந்த ஒரு உணவையும் பத்திரப்படுத்தி பலமுறை சூடேற்றி சாப்பிடாதீர்கள். இங்கு எந்த உணவை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

செலரியில் நைட்ரேட் அதிகளவு உள்ளது. இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றினால், அந்த நைட்ரேட் நைட்ரைட்டுகளாக மாறி நஞ்சாகிவிடும். பெரும்பாலும் செலரி சூப்புகளில் தான் சேர்க்கப்படும். அப்படி சூப் தயாரிக்கும் போது அதில் செலரி சேர்த்திருந்தால், அதை உடனே குடியுங்கள். ஒருவேளை குடிக்க முடியாவிட்டால், மீண்டும் சூடேற்றுவதற்கு முன்பு சூப்பில் இருந்து செலரியை நீக்கிவிட்டு, சூடேற்றி குடியுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக்கீரையை சமைத்த பின் மறுபடியும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. பசலைக்கீரையில் நைட்ரேட் உள்ளது. இதை மீண்டும் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். அதோடு, அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ப்ரீ ராடிக்கல்களை உருவாக்கி, நோய்களை ஏற்படுத்தும்.

சமைக்காத அரிசியில் ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியா வித்துக்கள் இருப்பதாக FSA கூறுகிறது. இத்தகைய அரிசியை சமைக்கும் போது, அந்த வித்துக்கள் அழியாமல் உயிருடன் தான் இருக்கும். சமைத்த எஞ்சிய சாதத்தை அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள வித்துக்கள் பெருக்கமடைந்து, ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வாந்தி அல்லது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அதோடு, இந்த சாதத்தை மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள வித்துக்கள் அழியாமல் தான் இருக்கும். ஆகவே சாதத்தை சமைத்தால், அதை அந்த வேளையிலேயே சாப்பிட்டுவிடுங்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள்.

காளானை சமைத்தால், சமைத்த அப்பொழுதே சாப்பிடுங்கள். காளானில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள புரோட்டீன்கள் உடைக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும் மற்றும் காளானை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அது உடலில் டாக்ஸின்களை உற்பத்தி செய்யும்.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்றவை அதிகளவில் உள்ளது. உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றும் போது, அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க, சமைத்த உருளைக்கிழங்கை அப்போதே சாப்பிட்டுவிடுங்கள்.

முட்டையில் வளமான அளவில் புரோட்டீன்கள் உள்ளது. எப்போதும் வேக வைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமானதாக்கும். வேக வைத்த முட்டையை உடனே சாப்பிடுங்கள். ஆனால் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள், வேண்டுமெனில் குளிர்ந்த நிலையில் கூட சாப்பிடுங்கள். ஏனெனில் பொதுவாக புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளில் நைட்ரஜென் அதிகளவில் இருக்கும். சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடையும் வாய்ப்புள்ளது.

சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் சமையல் எதையாவது சமைத்தால், அதை எப்போதும் அடிக்கடி சூடேற்றி சாப்பிடாதீர்கள். சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. இதை அதிகமாக சூடேற்றி சாப்பிடும் போது, சிக்கனின் தன்மை மாறிவிடும். இதனால் செரிமான மண்டலத்தில் இடையூறு ஏற்பட்டு, கடுமையான செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வால்நட் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஹாசில்நட் எண்ணெய், ஆளி விதை எண்ணெய் போன்றவை குறைந்த புகைப்புள்ளி எண்ணெய்களாகும். மேலும் இந்த எண்ணெய்களை ஒருமுறைக்கு மறுமுறை சூடேற்றினால், அழுகிப் போன நாற்றம் வீசும். ஆகவே இந்த எண்ணெய்களை எப்போதும் சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள். வேண்டுமானால், இந்த எண்ணெய்களை உணவுகளை சமைத்த பின், இறுதியில் மேலே சுவை மற்றும் மணத்திற்காக லேசாக ஊற்றிக் கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தும் கெமிக்கல்கள் இருக்கும். இந்த இறைச்சியை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதில் உள்ள கெமிக்கல்கள் சூடேற்றும் போது, உடலினுள் எதிர் விளைவுகளை உண்டாக்கி, சில சமயங்களில் கொடிய புற்றுநோய் தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம்.

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இந்த பீட்ரூட்டை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும். பீட்ரூட் சேர்க்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளை சூடேற்றினாலும், அது கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். இந்த கார்சினோஜெனிக் பண்புகள், புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

முள்ளங்கியில் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை ஒருமுறைக்கு பலமுறை சூடேற்றும் போது, அது நஞ்சாகி, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டிவிடும். எனவே முள்ளங்கியை ஒருமுறை சமைத்த பின் சூடேற்றாதீர்கள்.

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான லெட்யூஸ் கீரை பச்சையாக சாப்பிட்டால் அதன் முழு நன்மையைப் பெறலாம். சிலருக்கு சமைத்து சாப்பிட பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இந்த கீரையை சமைக்கலாம். ஆனால் சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த கீரையிலும் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. சூடேற்றினால் ஃபுட் பாய்சன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிரைவாக முயற்சித்தால் பலன் நிச்சயம்! பானை வயிறையும் கரைக்கும் அற்புத பானம்!
Next articleஉங்களுக்கு மண்ணீரலில் நோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில முக்கிய அறிகுறிகள்!