சின்னத்திரையின் தமிழ் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் சித்ரா ஆவர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு, இருக்கையில் ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளிக்கிறார். அப்படி இருக்க, இவரது ரசிகர் ஒருவர் நீங்கள் கஷ்டப்பட்டு கட்டின வீட்டை காட்ட முடியுமா எனக் கேட்டிருந்தார்.
அதற்கு சித்ராவும் உடனே புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் உழைப்பின் அடையாளம் எனக் கூறி வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: