ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் நதியாவின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள். நதியா அணிந்த உடை, கம்மல் போன்றவை சந்தையிலும் பிரபலமாக திகழ்ந்தன.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நதியா, அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பல வருடங்களுக்கு பிறகு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன்பிறகு அம்மா, அக்கா, அண்ணி கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரை சீரியலுக்கும் வந்து விட்டார்.
சரிகம நிறுவனம் தயாரித்து, ஒளிபரப்பி வரும் ரோஜா தொடரில் நதியா இணைந்திருக்கிறார். நதியா தொடர் முழுக்க நடிக்க மாட்டார். சில எபிசோட்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த தொடரில் பிரியங்கா, சிபு சூரியன், வடிவுக்கரசி, சிவா, காயத்ரி தேவ் நடிக்கிறார்கள்.
மேலும் சீரியலில் குதித்துள்ள நடிகை நதியாவிற்கு பல சீரியல் பார்க்கும் பல பெண்களிடம் இருந்து ஒரே வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்களாம்.