சாப்பாட்டில் விஷம் வைத்து குடும்பத்தையே ஏன் கொலை செய்தேன்? பெண்ணின் திடுக்கிடும் வாக்குமூலம்!

0

இந்தியாவில் தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற மகள்கள், தாய், தந்தை உள்ளிட்ட நான்கு பேரை விஷம் வைத்து கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி குஞ்சிகண்ணன்- கமலா. இவர்களுக்கு சவுமியா(28) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான சவுமியாவுக்கு ஐஸ்வர்யா , கீர்த்தனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சவுமியாவின் மகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் திகதி சவுமியாவின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், மார்ச் மாதம் 7-ஆம் திகதி சவுமியாவின் தாய் கமலாவும், ஏப்ரல் மாதம் 13-ஆம் திகதி தந்தை குஞ்சி கண்ணனும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து படுக்கை அறையில் இறந்தனர்.

இதனால் உறவினர்களுக்கு இது குறித்து சந்தேகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் என்று கூறியதால், பொலிசார் விசாரணையின்றி உடல் பரிசோதனை செய்யப்படாமலே அடக்கம் செய்யப்பட்டன.

அக்கம் பக்கத்தினர் இது குறித்து கேட்ட போது, தங்கள் வீட்டு கிணற்றில் அமில தன்மை உள்ள தண்ணீர் இருந்ததாகவும், அதை குடித்ததால் மகள் மற்றும் பெற்றோர் இறந்து விட்டதாகவும் கூறியதால், அக்கம் பக்கத்தினருக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர். பொலிசார் விசாரணைக்காக சென்ற போது அமிலதன்மை கொண்ட தண்ணீரால் தனக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பொலிசார் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, சவுமியா முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர், திருமணமான சில வருடங்களிலேயே இளைஞர்களுடன் தனக்கு தவறான தொடர்பு இருந்து வந்ததாகவும், 6 வருடங்களுக்கு முன்பு தனது தவறான தொடர்பை நேரில் பார்த்துவிட்ட தனது இளைய மகள் கீர்த்தனாவுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும், கடந்த ஆண்டு இறுதியில் தனது நடத்தையில் சந்தேகம் கொண்ட மூத்தமகள் ஐஸ்வர்யாவையும், தாய் கமலாவையும் , இறுதியில் தந்தை குஞ்சி கண்ணனையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சவுமியாவை பொலிசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி சவுமியாவுடன் தொடர்பில் இருந்த அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்: மேடையிலேயே கூறிய முன்னணி ஹீரோயின்!
Next articleபள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி!