சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை! அரசியல் கொந்தளிப்புக்கு முற்றுப்புள்ளியா!

0

நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் ஆசனம் மற்றும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் தொடர்பான வெளியான வர்த்தகமானியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!
Next articleமைத்திரி போடும் பலே திட்டம்! ரணில் நாடாளுமன்றில் வெற்றிபெற்றால்!