கோவில்களில் கொடிமரம் நடுவதற்கான காரணம் என்ன?

0

இந்துக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. ஆனால் ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஓர் ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பது போல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்பக்கிரகம் முகமாகவும், அர்த்தமண்டபம் கழுத்தாகவும், இரு தோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடிமரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடி மரம் முதுகுத் தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன.

ஆலயங்களில் இந்த கொடிமரம் கருவறைக்கு நேராகத்தான் நடப்பட்டிருக்கும். கொடிகம்பத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடிமரம் செய்வர்

மின்னூட்டம் பெற்ற பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலர் மீது பாய்ச்சும். இந்த சக்தியானது கருவறைக்கு இரு புறம் இருந்து கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாயும். இந்த பிரபஞ்ச சக்தியை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மானுடர்களுக்கு இல்லை.

இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியை மாற்றி இரு புறம் பாய்ச்சும். கொடிமரம் இல்லை என்றால் இந்த அதீத சக்தியின் தன்மையை மானுடர்கள் ஏற்றுக் கொள்வது கடினம். இதற்காகத்தான் கொடிமரம் கோயில்களில் உள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான செயல்கள்!
Next articleஇந்து திருமணத்தின் சடங்குகளின் அர்த்தங்கள் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுகங்க!