கையெழுத்து ஜோதிடம் தெரியுமா? கையெழுத்தினை பார்த்து கூட தலை எழுத்தினை தீர்மானித்து விடலாம்!

0

நம் எதிர்காலத்தினை ஜோதிடம், கைரேகை பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அவரவரின் கையெழுத்தினை பார்த்து கூட தலை எழுத்தினை தீர்மானித்து விடலாம்.

ஒருவர் செல்வந்தர் ஆவதும் செல்வாக்கான வாழ்க்கையினை இழப்பதும் அவரவரின் கையெழுத்தினை பொருத்து கூட அமையும். கையெழுத்தினை வைத்து அவரின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் கலைக்கு பெயர் கிராபாலஜி.

கி.பி.1782-க் ஆண்டு இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தஅன்னா கோரன் என்னும் பெண்மணி கையெழுத்து ஆராய்ச்சி கலை பற்றி இவர் நிறுவிய நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது.

ஒவ்வொருவரின் மூளையிடும் கட்டளையின்படி தான் அவரவரின் கையெழுத்து அமைகிறது. இதன்மூலம் அனைவரின் குணசதியத்தினை அறிய இயலும் என்கிறது விஞ்ஞானம்.

ஒருவர் எந்த மொழியில் எழுதினாலும் அதன் வடிவத்தினை வைத்து அவர்களின் எதிர்காலத்தினை அறிய இயலும்.

ஒருவர் தன் கையெழுத்தினை அரிசாண்டில்(Horizantal) நிலையில் தெளிவற்றதாக எழுதினாலோ அல்லது 15டிகிரி என்ற நிலையில் எழுதினாலோ அவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இது ஆண், பெண் இருபாலர்க்கும் பொருந்தும்.

30 டிகிரி கோணத்தில் ஒரு பெண் தன் கையெழுத்தினை எழுதினால், அவர் புகழ் பெற்ற வாழ்க்கையினை அடைவர். ஆனால், ஆண்களின் கையெழுத்து இருந்தால் துன்பத்தினை அடைவர்.

45 டிகிரி கோணத்தில் தங்களின் பெயர் தெரியும்படி கையெழுத்து இடுபவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் போது 1 செ.மீ. க்கு அதிகமாக கையெழுத்திற்கு அடியில் நீளமான கோடு வரைவது அவ்வளவு நல்லது.

கையெழுத்திற்கு நம் தலையெழுத்தினை மாற்றும் சக்தியுண்டு அதற்கேற்ப நம் கையெழுத்தினை மாற்றி கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்க இந்த ராசியா? அப்ப உங்க திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்!
Next articleசிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்! அவரை அப்பா என்று அழைப்போம், ஆனால்!