குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மிதுனம்.

0

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நல்ல அறிவாற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஆண்டுக்கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதோடு, கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கண்ட சனி நடைபெறுகிறது. தற்போது 2,8- ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்களான ராகு, கேது 13-2-2019 முதல் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.

இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நிம்மதி குறைவுகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். குருபார்வை 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய தொகைளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்புக்காக காத்து இருக்காமல் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியம் ஓரளவுக்குத் தான் சிறப்பாக அமையும். வயிறு கோளாறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்பு, ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் வம்பு பிரச்சினைகள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே அடிக்கடி உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையே இல்லாமல் வம்பு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டபட வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். புத்திர வழியிலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.

தொழில் வியாபாரம்
தொழிலில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் தொழிலில் மந்த நிலை நிலவும். கூட்டாளிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் நெருக்கடிகள் தொடரும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எவ்வளவு தான் சோதனைகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொண்டு லாபங்களை பெறக்கூடிய அளவிற்கு ஆற்றலையும் துணிவையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்
பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உயரதிகாரிகளின் நெருக்கடி அதிகரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். சில நேரங்களில் வீண்பழிச் சொற்களும் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிபடுத்த இயலாமல் தடைகள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய உயர்வுகளையும் பிறர் தட்டி செல்வார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி அமைவதில் தடைகள் உண்டாகும்.

அரசியல்
பணவரவுகளுக்கு தடைகள் நிலவினாலும் பதவிக்கு இடையூறு வராது. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உத்தமம். கட்சி பணிகளுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக வருவாய்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் அதிக கவனம் தேவை. மக்களின் ஆதரவை பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் உத்தமம். எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்களின் பலம் குறையும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபட வேண்டியிருக்கும். கால் நடைகளாலும் வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும். தேவைக்கேற்ற வேலை ஆட்கள் கிடைக்காமல் நடக்க வேண்டிய வேலைகள் தடைப்படும்.

கலைஞர்கள்
கலைஞர்கள் தேவையற்ற பிடிவாதங்களை தளர்த்தி கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நல்லது. வரவேண்டிய சம்பள பாக்கிகளில் தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் உத்தமம். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படகூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. புத்திரர்களால் சில நேரங்களில் மனசஞ்சலங்கள் உண்டாக கூடும். பணவரவுகள் சுமாராகவே இருக்கும் என்பதால் ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்
கல்வியில் மந்த நிலைகள் ஏற்பட கூடும் என்றாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். வீணான பொழுது போக்குகள் உங்களின் மனநிலையை மாற்றுவதுடன் வீண் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற எதிர்நீச்சல் போட வேண்டும். பணவரவுகள் ஒரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது, பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சர்பகிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும்.

பொருளாதாரநிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் உங்கள் ராசியாதிபதி புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் எதையும் சமாளித்து விட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும்.

வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தினைப் பெற முடியும்-. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சர்ப சாந்தி செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் லாபம் தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. கண்டசனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது வெங்கடாசலபதி வழிபாடு மேற்கொள்வது நல்லது. 13-02-2019 முதல் சர்பகிரகங்கள் சாதமின்றி சஞ்சரிக்க இருப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8, நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி
கல் – மரகதம் திசை – வடக்கு தெய்வம் – விஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
Next articleகோர விபத்தில் பொலிஸ் உத்தியேகத்தர்கள் பலி!