குபேரன் ஏழையாக இருந்து பணக்கார கடவுளாக மாறியது எப்படி தெரியுமா! இதை செய்ததால் தான்!

0

தேவர்களின் செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குபேரனுக்கே வறுமை ஏற்பட்டபோது அவர் மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டு அதில் நாடு நகரங்கள் அனைத்தையும் இழந்த குபேரன் வேறு வழியில்லாமல் சிவ பெருமானிடம் முறையிட சிவபெருமானோ நீ நிறைய நெல்லி மரங்களை வளர்த்து விட்டு என்னை வந்து பார் என்றார்.

குபேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சொன்னது சிவபெருமானாச்சே! அதனால் ஆயிரக்கனக்கான நெல்லி மரங்களை வளர்த்து வந்தார் குபேரன்.

நெல்லி மரம் பூ பூத்தது. பூவெல்லாம் காய் ஆகின, காய்களெல்லாம் பழம் ஆனது. குபேரனை எதிர்த்த அரசன் கூட ஓடி வந்து கப்பம் கட்டினான் செல்வம் பெருகியது, நாடு நகரமெல்லாம் திரும்ப கிடைத்தது.

சிவபெருமானிடம் சென்றான் குபேரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நெல்லி மரம் வளர நானும் உயர்ந்தேன் இது என்ன விந்தை என்று கேட்க! சிவபெருமான் சொன்னார் நீ வைத்தது மரங்கள் அல்ல. லட்சுமி தேவிகள் தினமும் தண்ணீர் ஊற்றி லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் அதோடு நீ செய்த பாவங்களும் தீர்ந்தது.

நெல்லி மரம் லட்சுமி தேவியின் சொரூபம் என்றார், ஆகவேதான் லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் நீ என்றார் இதை கேட்ட குபேரனும் நெல்லி மரத்தை வணங்கி விடைபெற்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிறமையுள்ள வடக்கு மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! தவற விட்டுறாதீர்கள்!
Next articleகுடித்துவிட்டு பாஸ்கியிடம் அலப்பறையில் ஈடுபட்ட uncle! வைரலாகும் வீடியோ!