வீட்டில் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டமா? இதை செய்து பாருங்களேன்!

0

வீட்டில் எவ்வளவு தான் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

அதில் ஒன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள விளக்கேற்றி உங்களின் விருப்ப கடவுளை வழிபட்டு விட்டு காகத்திற்கு சிறிதளவு காய்ந்த திராட்சையை உணவாக அளிக்க வேண்டும். தினமும் இதை செய்து வருவதன் மூலம் எல்லா கஷ்டங்களும் மறைந்து நல்லதே நடக்கும்.

உலர் திராட்சை வாங்கி இதை செய்ய முடியாதவர்கள் காலையில் வெள்ளை நிற சோறு பொங்கி நாம் சாப்பிடுவதற்கு முன்னதாக அதில் சிறிது எள்ளை கலந்து காகத்திற்கு உணவாக அளிக்க வேண்டும்.

பின்னர் காகம் அதை சாப்பிட்டதற்கு பின் நாமும் சாப்பிடலாம். இதன் மூலம் நம்முடைய துன்பங்கள் யாவும் கானல் நீர் போல மறைந்து விடும். பொதுவாக காகத்துக்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருள் மட்டுமில்லாமல் நம்முடைய முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

இதன் மூலம் வாழ்வில் எளிதாக முன்னேற முடியும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

காக்கைகளை உணவளிப்பது மட்டுமில்லாமல் அதை வணங்கினால் சனிபகவானை வணங்கியது போன்ற பலனை கொடுக்கும். மேலும் காகமானது சனி பகவானின் வாகனம் ஆகும்.

எனவே காகத்திற்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி அழிக்குமாம். கால்கள் ஊனமுற்ற, மாற்று திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் அருளை பெற முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகத்தில் கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!
Next articleமகள் பாலியல் வன்கொடுமை வீடியோவை ஆபாச இணையத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!