காதல் கணவனின் தொல்லை தாங்காமல் விபரீத முடிவெடுத்த பெண் மருத்துவர்!

0

ஹைதராபாத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவனின் தொல்லை தாங்காமல் பெண்மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது கார்த்திக் என்பவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் கூட, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன் ஜெயஸ்ரீ குடும்பத்தினர், ரூ 25 லட்சம் ரொக்கபணம், 45 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

அதன்பின்னரும் கூட தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பியதிலிருந்து வரதட்சணை கேட்டு ஜெயஸ்ரீயை கார்த்திக் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் சாதியினை சொல்லியும் காயப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை! கவனிக்காத பெற்றோர்!
Next articleதுண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தி சுற்றும் சிறுமி… பதற வைக்கும் காணொளி!