யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் கீழ் பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 19 இலட்சம் ரூபா கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.
நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் அடிப்படையில்குறித்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவரது காதலன் என அறியப்படும் இளைஞன் மற்றுமொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.