பிக்பாஸ் இரண்டு சீசன்களிலும் நடக்காத ஒரு விஷயம் 3வது சீசனில் நடந்து வருகிறது.
போட்டியாளர்களுக்கே தெரியாமல் சரவணன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார், கையை அறுத்துக் கொண்டு தானாகவே மதுமிதா வெளியேறினார்.
இப்போது என்னவென்றால் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்கின்றனர்.
அந்த தகவல் உண்மை தான் போல் தெரிகிறது. இன்று காலை வந்த புதிய புரொமோவில் சாண்டி, கவினிடம் 10 நாள் உள்ளது ஏன் வெளியேறுகிறாய், ஏன் இப்படி செய்தாய் என கண்ணீருடன் கேட்க கவின் அவரை ஆறுதல் செய்கிறார்.
இதோ அந்த வீடியோ,
#Day95 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/2JiX8ClEiT
— Vijay Television (@vijaytelevision) September 26, 2019




