பிக்பாஸ் தொடங்கி வெறும் இரண்டே நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் அபிராமி கவினை காதலிப்பதை ஓபனாக கூறியுள்ளார். இதற்கு கவினும் மறுப்பு தெரிவித்து அவரை கலாய்த்து வருகிறார்.
கவின் யாரை எந்த வகையிலும் புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாமல் எப்போதும் எல்லோரையும் பொதுவாக நடத்தி வருகிறார். கவின் செயல்கள் அனைவருக்கும் பிடித்து வருகிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் அபிராமி கவின் மேல் க்ரஸ் வந்ததாக கூறியுள்ளதற்கு அபிராமி அம்மா தற்போது ஒரு பேட்டியில் கூறியதாவது “க்ரஸ் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம். அது வேற இது வேற, லவ்வில் கூடநிறைய வித்தியாசம் உள்ளது. நாயைக்கூடத்தான் லவ் பண்ணலாம் என்று பேசியுள்ளார்” இது பலருக்கும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அபிராமி அம்மாவை நெட்டிசன்கள் தாக்கி பேசி வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: