பலபேர் வெயிட் குறைஞ்சாலும் தொப்பை மட்டும் குறைய மாட்டேங்குதே என்று கலவலைப்படுவதுண்டு.
உடலின் மற்ற இடங்கள் போல் அல்ல வயிறு. மற்ற பாகங்களில் எலும்புகளின் மேல் சதை இருக்கும்.
ஆனால் வயிற்றுப் பகுதியில் எலும்பு இல்லாததால் அதிக கொழுப்பு செல்கள் தங்கி தொப்பையை ஏற்படுத்திவிடும். எனவேதான் எளிதில் கரையாமல் அப்படியே இருக்கும். அதற்கு ஓர் சிறந்த வழிதான் இந்த பாட்டி வைத்தியம்.
பண்டைய தமிழர்களின் வைத்தியத்திய முறையினை தினமும் வெறும் 15 நிமிடம் செய்தால் உடல் எடை விரைவாக குறையும்.
தேவையான மூலிகைகள்
கொள்ளு – 500 கிராம்
திரிபலா பௌடர் -250 கிராம்
சங்கல் கோச்டம் (Chengalva Kostu ) – 50 கிராம்
லோத்திரம் (Lodhra ) – 50 கிராம்
வசம்பு – 100 கிராம்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிசேம் ஆயிலுடன் கலந்து கொள்ள வேண்டும்.
முகம் மேல் நோக்கி உள்ள படி படுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதலில் இடதுபுறமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
கொழுப்புகள் உள்ள இடத்தில் இடமிருந்து வலமாக 4-6 முறை கிடைமட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் இடது கையை தொப்புளுக்கு வலது புறத்தில் வைத்து இரண்டு கைகளால் மெதுவாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை பெரிதாக்கி வயிறு முழுதும் மசாஜ் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை சிறிதாக்கி வயிற்றின் நடுப்பகுதியை அடைய வேண்டும்.
தேவைப்படும் காலம்
இந்த மசாஜ் ஆனது உங்களது தொப்பையை இயற்கையான முறையில், விரைவாக குறைக்க உதவுகிறது. இதனால் எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இதனை நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
எப்படி செயல்படுகிறது?
இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூலிகை பவுடர்கள் காய்ந்த மற்றும் வெப்பமான சூழலை உருவாக்கி தருகின்றன. இதனை உடலில் அப்ளை செய்யும் போது, ஒரு வித உராய்வு ஏற்பட்டு, இது சரும துளைகளை திறக்கின்றன. இது வெப்பத்தை அதிகப்படுத்தி, கொழுப்பை குறைக்கும் மெட்டபாலிசத்தை தூண்டுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறது.