கண்ணை தோண்டி அரங்கேறிய கொடூரம்! திருமணமான 48 மணிநேரத்தில் நிகழ்ந்த ஆணவக்கொலை!

0

இந்நிலையில், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில், பெண்ணின் அண்ணன் ஆள் வைத்து கொடூரமாக ஆணவப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப் அதே பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். கெவின் ஜோசப், அமலாகிரியில் உள்ள பி.கே. கல்லூரியைச் சேர்ந்த மாணவி நினுவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். கெவின் குடும்ப வறுமை காரணமாக வயரிங் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற பின் ஓராண்டுக்கு முன்னர் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

பணி விசா முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 15ம் தேதி இந்தியா வந்த கெவின்-நினு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்குப் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நினு நண்பர்கள் முன்னிலையில் கெவின்னை பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு 1.30மணியளவில் கெவின், மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.

இந்நிலையில், தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் கெவின் பிணமாக மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கெவின் பலமாகத் தாக்கப்பட்டு கிடந்துள்ளார். உடனடியாக பிணம் கிடந்த ஏரிக்கு சென்று உடலைக் கைப் பற்றி கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நினுவின் சகோதரர் ஷானு, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் அரங்கேறிய இந்த கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு அன்று காலை நினு மற்று ஜோசப் இருவரும் கெவினை நினுவின் சகோதரர் ஷானு கடத்திச் சென்றதாக காந்திநகர் பொலிசில் புகார் ஒன்றை அளித்தனர். ஆனால் அன்று கேரளா முதல்வர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரவிருந்ததால் அதன் பரபரப்பில் இந்தப் புகாரை ஏற்க பொலிசார் மறுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து காந்திநகர் இன்ஸ்பெக்டர் சிபு, சப்-இன்ஸ்பெக்டர் சன்னிமோன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோட்டயம் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு முகமது ரபீக் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தக் ஆணவக் கொலையைக் கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் கெவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கெவின்னை கொலை செய்வதற்கு முன்பாக, கம்பியாலும், மரத்தாலான தடியாலும் பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கண் தோண்டி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அந்தரங்க உறுப்பிலும் பலமாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாமல் துடிதுடித்து இறந்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரசிகர்கள் அதிர்ச்சி! பல வருடங்கள் ஓளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இனி இல்லை!
Next articleஉலக மக்களை தலைசுற்ற வைத்த சொகுசு வாழ்க்கை! 680 கோடிக்கு செருப்பு….தங்கத்தால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகள்!