மனைவியை கொலை செய்து விட்டு தீயிட்டு உடலை எரித்த கணவரை ஹைதராபாத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.
சந்தோஷ் நகர் பகுதியில் சானியா பேகம் என்ற பஞ்சாபை சேர்ந்த இளம் பெண் தீயில் கருகிய நிலையில் இருந்ததைக் கண்டு போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர்.
அவரது கணவர் சுலைமான் கழுத்தை நெறித்து மனைவியை கொலை செய்ததாகவும் கொலையை மறைக்க உடலை மண் எண்ணெய் ஊற்றி தீயிட்டு எரிக்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவாகி விட்ட சுலைமானை தேடி வருகின்றனர்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: