கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கியது ஆபத்தான பாம்பு மீன்! இது ஆபத்தின் அறிகுறியா! தீயாய் பரவும் புகைப்படம்!

0

தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கடலில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுகிறது.

சில மீன்கள் விஷம் பொருந்தியதாகவும் உள்ளன. ஆபத்தை ஏற்படுத்தும் மீன்களில் ஒன்றுதான் அஞ்சாலை.

மீனின் தலைப்பாகமும், உடலும் பாம்பு போன்று இருக்கும். அஞ்சாலை மீன்கள் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் ஆபத்தாது.

அஞ்சாலை வகை மீன்களின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் இருப்பதால், இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுவதையும் தனியாக எடுத்து விடும்.
தப்பித்தவறி மீனவர்கள் இதனிடம் சிக்கி கை, கால்களில் கடித்தால் எலும்பைத்தவிர சதைப்பகுதி முழுவதும் தனியாக இதன் வாய்க்குள் போய் விடும்.

ஆபத்து நிறைந்த அஞ்சாலை மீன்கள் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வலையில் தப்பித்தவறி சிக்கி விட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இதனை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள்.

குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள் சில நேரங்களில் கடல் அலையுடன் சேர்ந்து கரை ஒதுங்குவதும் உண்டு. நேற்று காலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் உயிருடன் ஒரு அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியது.

3 அடி நீளம் கொண்ட அஞ்சாலை மீன் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை பார்த்து ஆர்வத்துடன் மொபைலில் படம் எடுத்து சென்று வைரலாக்கி வருகின்றது.

Previous article31 மில்லியன் டொலர்களுடன் துபாய் இளவரசி ஓட்டம்! ஆத்திரத்தில் அரசர்!
Next articleபிறந்ததும் குழந்தை செய்த காரியம்! புகைப்படமாக வெளியிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் கணேஷ்!