இந்தியாவில் பொலிசார் ஒருவரின் செயல் இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தெலுங்கானாவில் பிரதான சாலை ஒன்றில் கடந்த 1-ஆம் திகதி வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென்று ரோட்டிலே மயங்கி விழுந்தார். அப்போது அந்த சாலையில் போக்குவரத்து சரி செய்து கொண்டிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கோபால் என்ற டிராபிக் பொலிசார் ஓடி வந்த அந்த மூதாட்டியை தூக்கி ஓரமாக அமரவைத்தார்.
மூதாட்டியின் நிலைமையை புரிந்த அவர் உடனடியாக அருகில் இருந்த உணவுகத்தில் உணவை வாங்கி வந்து தன் கையாலே ஊட்டி விட்டார்.
உடல் நலம் முடியாத அந்த மூதாட்டி, கோபாலை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லியுள்ளார். அதற்கு கோபால் என் தாயாக இருந்திருந்தால் செய்திருக்க மாட்டேனா என்று கூறிவிட்டு அங்கிருந்துசென்றுள்ளார்.
இந்தக் காட்சியை அங்கிருக்கும் நபர்பகள் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். கோபாலின் இந்த செயலை பார்த்த அனைவரும் கண்கலங்கியதுடன் அவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!